Kathir News
Begin typing your search above and press return to search.

நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு வலு சேர்க்கும் விதமாக 'சிமி' அமைப்புக்கு மேலும் ஐந்தாண்டு தடை!

சிமி அமைப்புக்கான தடையை மேலும் ஐந்தாண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது!

நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு வலு சேர்க்கும் விதமாக சிமி அமைப்புக்கு மேலும் ஐந்தாண்டு தடை!

KarthigaBy : Karthiga

  |  30 Jan 2024 8:39 AM GMT

இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கான (சிமி) தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 1977-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி உத்தர பிரதேசத்தின் அலிகரில் சிமி தொடங்கப்பட்டது. கடந்த 1980-ம்ஆண்டு தொடங்கி இந்த அமைப்பு பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா மற்றும் இந்தியன் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் சிமிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டில் சிமி அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இந்தத் தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக சிமி அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை நாளையுடன் நிறைவடைகிறது. இதுகுறித்த அறிவிப்பை தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் திங்கள்கிழமை பகிா்ந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘சிமி அமைப்பு நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாத நடவடிக்கைகளிலும், சமூக நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் செயல்களிலும் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், பயங்கரவாதத்துக்கு எதிரான ‘பூஜ்ஜியம்’ சகிப்புத்தன்மை என்ற பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பாா்வைக்கு வலு சோ்க்கும் விதமாக, சிமி அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் மேலும் 5 ஆண்டுகளுக்கு ‘சட்டவிரோத அமைப்பு’ என அறிவிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தீவிரவாதத்துக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அந்த வகையில் சிமி அமைப்புக்கான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.


SOURCE :NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News