ஓ.டி.டி நிகழ்ச்சிகளிலும் புகையிலை தடுப்பு எச்சரிக்கை - மத்திய அரசு உத்தரவு!
ஓடிடி என்று அழைக்கப்படுகிற 'ஓவர் தி டாப்' தள நிகழ்ச்சிகளிலும் புகையிலை தடுப்பு எச்சரிக்கை விளம்பரங்களை போட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
By : Karthiga
ஓ.டி டி. என்று அழைக்கப்படுகிற 'ஓவர் தி டாப்' தளங்களில் தற்போது திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவண படங்கள் வெளியாகி வருகின்றன. இவற்றில் சிகரெட் போன்ற புகையினை பொருட்களை பயன்படுத்துவது போன்ற காட்சி வருகிற போது அவற்றை பயன்படுத்துவது உடல் நலத்துக்கு தீங்கானது என்று எச்சரித்து விளம்பரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை திரையின் அடிப்பகுதியில் இடம்பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்காக சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்ட விதிகள் திருத்தப்பட்டுள்ளன. மே 31ஆம் தேதி புகையிலை எதிர்ப்பு நாள் கடைப்பிடிப்பதையொட்டி இதை ஒட்டிய அறிவிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இதே போன்ற எச்சரிக்கை அறிவிப்புகள் திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் ஏற்கனவே இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.