Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்ட்டி-ஆனெக்ஸ்டி மருந்துகள் காரணமாக பக்க விளைவுகள் ஏற்படுமா?

Antianxiety drugs are dangerous one or not?

ஆன்ட்டி-ஆனெக்ஸ்டி மருந்துகள் காரணமாக பக்க விளைவுகள் ஏற்படுமா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Dec 2021 12:30 AM GMT

கவலை என்பது மன அழுத்தத்தின் விளைவாக உடலில் உண்டாகும் ஓர் இயல்பான தாக்கமாகும். இது எதிர்காலம் குறித்த பயம் அல்லது பயத்தின் உணர்வாக கருதப்படுகிறது. பள்ளியின் முதல் நாள், வேலை நேர்காணல் அல்லது பேச்சுப்போட்டி போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் சிலர் பதற்றமடைகிறார்கள். எனினும், இந்த பதட்ட உணர்வுகள் ஆறு மாதங்களுக்கும் மேலாக உச்சத்தில் இருந்தால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் தலையிடுகின்றன. எனில், நீங்கள் ஏதேனும் கவலைக் கோளாறின் தாக்கத்திற்கு ஆளாகி இருக்கக்கூடும். கவலைக் கோளாறு ஏற்பட்டால், மக்கள் ஒரு நிலையான பயம் அல்லது கவலையில் ஆழ்ந்து இருக்கின்றனர். இது மிக கடுமையானது மற்றும் சில நேரங்களில் உடலை சோர்வாக மாற்றுகிறது.


கவலைக் கோளாறுகளுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் 'ஆன்ட்டி-ஆனெக்ஸ்டி' மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன. நீங்கள் ஏதேனும் கவலைக் கோளாறுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டால், பதட்டத்தை நிர்வகிக்க உங்களுக்கு உதவி தேவைப்படலாம். இதற்கான சிகிச்சையில் பொதுவாக உளவியல் சிகிச்சை மற்றும் மருந்துகள் உள்ளடங்கும். மருந்துகள் கவலைக் கோளாறுகளை முற்றிலும் குணப்படுத்தாது, எனினும் அவை கவலையின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்றன. மேலும், நீங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டுடன் இருக்க முடிகிறது.


எனவே இந்த மருந்துகளை எடுத்துக் கொண்ட பின் ஆல்கஹால் உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் இந்த மருந்துகளுடன் ஆல்கஹால் உட்கொள்ளுதல் அதிக மயக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த மருந்துகளின் பயன்பாட்டினால் கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுவதற்கான சான்றுகள் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆன்டி-ஆனெக்ஸ்டி மருந்துகளின் பயன்பாடு பாதுகாப்பற்றதாகும். இருப்பினும், நன்மைகள் சாத்தியமான அபாயங்களை விட அதிகமாக இருந்தால், சில உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் மருத்துவர்கள் அதை அரிதாகவே பரிந்துரைக்கின்றனர்.

Input & Image courtesy: Logintohealth


Next Story
கதிர் தொகுப்பு
Trending News