Begin typing your search above and press return to search.
தீர்ப்பாயத்தின் தலைவராக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்
தீர்ப்பாயத்தின் தலைவராக முனீஸ்வர்நாத் பண்டரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி உத்தரவு
By : Karthiga
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் முனீஸ்வர்நாத் பண்டாரி .இவர் வருகிற 12-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் .இதற்காக அன்று பிற்பகலில் அவருக்கு வழியனுப்பு விழா ஐகோர்ட் சார்பில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தலைமை நீதிபத முனீஸ்வர்நாத் பண்டாரியை போதை பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில் டெல்லியில் உள்ள இந்த தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியை 30 நாட்களுக்குள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஏற்க வேண்டும்.
அன்றிலிருந்து நான்காண்டுகள் அல்லது மறு உத்தரவு பிறக்கும் வரை இப்பதிவியல் அவர் வகிப்பார். இதற்காக மாதம் ரூபாய் 2.50 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Next Story