Kathir News
Begin typing your search above and press return to search.

ஏன் இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்க வேண்டியதானே - ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பும் அசாம் முதல் மந்திரி

ராகுல் காந்தியின் பாரத ஜோடோ யாத்திரை குறித்து அசாம் முதல் மந்திரி கிண்டல் செய்துள்ளார்

ஏன் இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்க வேண்டியதானே - ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பும் அசாம் முதல் மந்திரி

KarthigaBy : Karthiga

  |  8 Sep 2022 8:45 AM GMT

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பற்றிய கருத்து கூறிய அசாம் பா.ஜ.க முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா அவர் இந்தியாவுடன் பாகிஸ்தானையும், வங்காளதேசத்தையும் இணைக்க முயற்சிக்க வேண்டும் என கூறினார். இந்தியாவை இணைப்போம் என்று சொல்லிக் கொண்டு பாரத் ஜோடோ யாத்திரையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்.


இதை ஒட்டி பா.ஜ.க ஆளும் அசாம் மாநில முதல்வர் நேற்று கவுகாத்தியில் கருத்து தெரிவித்தார். அப்போது அவர்களை கூறியதாவது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இந்த நூற்றாண்டின் வேடிக்கை. ஏனென்றால் இந்தியா ஒரே நாடு .அது ஒன்று பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் ஒரே நாடாக இந்தியா ஒன்றுபட்டுள்ளது. ஒருங்கிணைப்புக்கு அவசியமில்லை. 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தானை உருவாக்குவதற்காக நாட்டில் பிரிவினை ஏற்பட்டது. பின்னர் வங்காளதேசமும் உருவானது. ராகுல் காந்திக்கு தனது மூதாதையர் உருவாக்கிய பிரச்சனையால் வருத்தம் இருந்தால் அல்லது மன்னிப்பு கேட்க விரும்பினால் அவர் பிளவுபடாத இந்தியாவை உருவாக்குவதற்கு இந்தியாவுடன் பாகிஸ்தானையும் பங்களாதேசத்தையும் இணைக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


இவர் ட்விட்டரிலும் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் ஒப்பு கொண்டதால் தான் 1947 இல் இந்தியா பிரிக்கப்பட்டது .காங்கிரஸ் ஒருங்கிணைப்பை விரும்பினால் ராகுல் காந்தி பாகிஸ்தானில் இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தட்டும் என கூறியுள்ளார்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News