Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க ஆட்சியால் ஜொலித்த அயோத்தி நகரம் - 24 லட்சம் தீபங்கள் ஏற்றி அயோத்தி சாதனை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் 24 லட்சம் தீபங்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க ஆட்சியால்  ஜொலித்த அயோத்தி நகரம் - 24 லட்சம் தீபங்கள் ஏற்றி அயோத்தி சாதனை!

KarthigaBy : Karthiga

  |  13 Nov 2023 8:30 AM GMT

அயோத்தியில் தீபோத்சவ திருவிழாவில் 24 லட்சம் தீபங்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டது. உ.பியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைந்த பின்னர் அயோத்தியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை என்று பெயரில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்தியில் கலாச்சார ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் ஊட்டி மட்டும் இல்லாமல் பல மாநிலங்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் அதிகளவு தீபங்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு 24 லட்சம் தீபங்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்திக்கு வந்தார். தீபோத்சவ திருவிழாவை அவர் தொடங்கி வைத்தார். இந்த விழாவை காண 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் பொதுமக்கள் வந்துள்ளனர். இதனால் அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.


SOURCE :Dinakaran

Next Story
கதிர் தொகுப்பு
Trending News