நகரங்களில் சொந்த வீடு வாங்க வங்கி கடன் சலுகை இம்மாதம் முதல் அமல் - மத்திய அரசு அறிவிப்பு
நகரங்களில் சொந்த வீடு வாங்க விரும்பும் நடுத்தர வகுப்பினருக்கு வங்கி கடன் வட்டியில் சலுகை அளிக்கும் திட்டம் இம்மாதம் அமல்படுத்தப்படுகிறது.
By : Karthiga
பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி உரையாற்றிய போது , புதிய திட்டம் ஒன்று அறிவித்தார். நகரங்களில் வாடகை வீடுகள் மற்றும் அனுமதி அற்ற குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர வகுப்பினர் நகரங்களில் சொந்த வீடு வாங்குவதற்காக வங்கி கடன் வட்டியில் நிவாரணம் அளிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் இந்த புதிய திட்டம் இம்மாதம் அமல்படுத்தப்படும் என்று மதிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இது பற்றிய மந்திரி ஹர்தீப்சிங் பூரியும் துறையின் செயலாளர் மனோஜ் ஜோஷியும் நிருபர்களிடம் கூறியதாவது:-
நகரங்களில் நடுத்தர வகுப்பினர் சொந்த வீடு வாங்க வங்கி கடன் வட்டியில் நிவாரணம் அளிக்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்படுகிறது. அதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
SOURCE :DAILY THANTHI