Kathir News
Begin typing your search above and press return to search.

போனை சைலண்ட் மோடில் போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

போனை சைலண்ட் மோடில் போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

போனை சைலண்ட் மோடில் போடுவதால்  ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 April 2020 2:14 AM GMT

மின்னஞ்சல், வாட்சப், முகநூல், டிவிட்டர், வலைப்பூ, இன்ஸ்ட்டாகிராம், குறும்செய்திகள் அப்பப்பா... போதும் எனும் அளவிற்க்கு நவீன தொழில்நுட்பத்தில், சமூக வலைதளங்களில் தொலைந்து கொண்டிருக்கும் வேளையில் நம்மை அதிலிருந்து மீட்டெடுக்க சில டிப்ஸ்...

தேவையற்ற நோட்டிப்பிகேஷனை அனைத்து விடுங்கள்

உங்கள் சமூக வலைதள கணக்குகளை ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே பார்ப்பது என்று தீர்மானித்து கொள்ளுங்கள். உங்கள் அலுவல் சார்ந்ததாக இருக்கும் பட்சத்தில், அவசர முடிவுகள் எடுக்க வேண்டிய நிர்பந்தங்கள் இருந்தால் இரண்டு அல்லது மூன்று முறை பார்க்கலாம். மிக குறிப்பக ஒரு அளவை வரித்து கொள்ளுங்கள்.

மிக முக்கியமாக, உங்கள் அன்பானவர்களிடம், உறவுகளிடம் நீங்கள் சந்திக்கும் பொழுதெல்லம் நான் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே எனக்கான செய்திகளை பார்ப்பேன் என்பதை தொடர்ந்து கூறி அவர்களையும் உங்களின் ஒழுங்குமுறைக்கு பழக்கப்படுத்துங்கள்

தேவையற்ற செயலிகளை, உங்கள் அலைபேசியில் இருந்து அழித்துவிடுங்கள்

தேவையற்ற வலைப்பூ, நம் வாழ்வுக்கு, வாழ்க்கைக்கும் அர்த்தம் சேர்க்காத நபர்களை, பக்கங்களை பின் தொடர்வதை நிறுத்துங்குள்.

ஒரு நாளில் சில மணி நேரங்கள் நாம் இணையத்தில் இருந்தால்... அதனால் பெறும் செய்தி மனதிற்க்கு நிறைவானதாக, சிந்தனைக்கு செரிவானதாக அமையுமாறு பார்த்து கொள்வது நம் கடமை.

இவைகளை தொடர்ந்து செய்கிறபொழுது, இவற்றை நம் பழக்கமாக வரித்து கொள்கிற போது நம் செயல்திட்டத்தில் ஒரு ஒழுங்கு முறை பிறக்கும். பல தேவையற்ற இரைச்சல்கள் குறையும் நம் கவனத்தை சிதறடிக்கிற சப்தங்கள் குறைந்தால் நமக்கான நேரங்கள் மலரும்.

உதாரணமாக, எதோவொரு வரிசையில் நிற்கும் சூழல் ஏற்படுகிறது, நண்பருக்காக காத்திருக்கிறீர்கள், உணவகங்களில் உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருக்கிறீர்கள் இந்த நேரங்களிலெலாம் உங்கள் போன்கள் அலராது. உங்களுக்கான சில பிரத்யேக நேரங்கள் உருவாகும். நாம் வெறுமனே அமர்ந்திருக்கும் என நீங்கள் எண்ணினால் அது தவறு. நீங்காள் வெறுமனே இல்லை... உங்களுக்கான சில ஷணங்களை மிகுந்த விழிப்புணர்வோடு உருவாக்கியிருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.

அந்த நேரத்தை அனுபவியுங்கள். அந்த அமைதியை ரசியுங்கள். உங்களை சுற்றியுள்ள மனிதர்களை சூழல்களை உள்வாங்குங்கள், இமயம், மலைஉச்சிகளுக்கு சென்றால் கூட கிடைக்காத பயிற்சியும் ஞானமும்.... சில மணித்துளிகள் உங்கள் சுவாசத்தை கவனித்தால் நிச்சயம் கிடைக்கும். அந்நாளின் நல்ல தருணங்களை அசைப்போடுங்கள்.

இரைச்சலை குறைத்த சில நாட்களிலெல்லாம் உங்களுக்கான நேரம் அதிகமாக இருப்பதை உணர்வீர்கள். புதிய வாழ்க்கை முறையை மெல்லமாக மிக மெதுவாக உங்களுக்குள் புகுத்துங்கள்.

உங்கள் அலைபேசியில்லாத ஒரு நடைபயிற்சிக்கு உங்களை மெல்ல தயார்ப்படுத்துஙக்ள். உங்கள் வாழ்க்கைக்கு, உங்களுக்கு எது அர்த்தம் சேர்க்குமோ அதை உங்களிடமிருந்து வெளிகொணருங்கள்.

வெளிப்புர ஒலிகளிலிருந்து நீங்கள் மீண்டதால் உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் அமைதியான சூழல் உங்களுக்குள் பல ஒலிகளை உருவாக்கும். அது வெற்றிக்கான விதைகளாக நிச்சயம் இருக்கும்.

உங்களுள் ஒரு புதிய இசை பிறக்கும், ஓவியம், கவிதை என சில கலை பிறக்கும், ஒரு தொழிலுக்கான சிந்தனை பிறக்கலாம், சவாலுக்கு சாதகமான ஒரு வழி தோன்றலாம், தோல்விகளின் வடுக்கள் மறையலாம்.

எனவே நீங்கள் மிகுவும் பரபரப்பாக இருக்கிறீர்கள் ஆனால் நாளின் இறுதியில் அந்த பரபரப்பில் பயனெதுவும் இருக்கவில்லை என்ற ஏக்கம் உங்களுக்கு ஏற்பட்டால்....போனை மாத்திரமல்ல உங்களை சுற்றியிருக்கும் மற்ற தேவையற்ற வஸ்துக்களையும் சைலண்ட் மோடில் போடுங்களேன்!!!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News