Kathir News
Begin typing your search above and press return to search.

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து: மத்திய அரசிடம் வேண்டுகோள்?

மூக்கு வழியாக செல்லும் கொரோனா தடுப்பு மருந்து மருந்தை கண்டுபிடித்த பாரத் பயோடெக் மத்திய அரசிடம் வைக்கும் வேண்டுகோள்.

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து: மத்திய அரசிடம் வேண்டுகோள்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Dec 2022 2:06 PM GMT

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை கோவின் வலைத்தளத்தில் சேர்க்க வேண்டும் என்று புதிய ஒரு கோரிக்கையை மத்திய அரசிற்கு பாரத பயோடெக் நிறுவனம் கேட்டுக்கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக அந்த நிறுவன வட்டாரங்களில் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகப்படுத்த உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.


குறிப்பாக இந்த தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் செலுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது என்று பாரத் பயோடெக் நிறுவனம் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறது மற்றும் அதற்கான சான்றிதழை பெறுவார்கள். அந்த வகையில் மூக்கு வழியாக தடுப்பு மருந்து சேர்த்துக் கொள்ளும் பயனாளிகளும் அதற்கான சான்றிதழை பெற வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே இந்த தடுப்பு மருந்து குறித்து விவரத்தை கோவின் வலைதளத்தில் சேர்க்க வேண்டும் என்று அதிக வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது.


மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய பாரத் பயோடெக் நிறுவனத்தை மத்திய மாநில அரசுகள் இதுவரை அணுகவில்லை. வெளிநாடுகளில் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் அந்த தடுப்பு மருந்து ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது. முதல் முறையாக மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து பாரத பயோடெக் உருவாக்கி இருக்கிறது. இந்த மருந்து 18 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அவசர கால அடிப்படையில் செலுத்த இந்திய மரத்தில் கட்டுப்பாட்டு இயக்குனராக ஒப்புதல் கிடைத்துள்ளதாக கடந்த செப்டம்பரில் பாரத் பயோடெக் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News