'மதுரை ஆதீனத்தை அமைச்சர் சேகர்பாபு நெருங்கித்தான் பார்க்கட்டுமே' - அண்ணாமலையின் எச்சரிக்கை
'மதுரை ஆதீனத்தை அமைச்சர் சேகர்பாபு மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும்' என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
By : Mohan Raj
'மதுரை ஆதீனத்தை அமைச்சர் சேகர்பாபு மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும்' என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
'மதுரை ஆதீனம் அடக்கத்துடன் பேச வேண்டும்' என நேற்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மிரட்டிய நிலையில் அதற்கு பதிலடி தரும் விதமாக அண்ணாமலை பேசியுள்ளார்.
திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாவது, 'திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புதிதாக காஸ்டியூம் போட்டிருக்கிறார். மீண்டும் காவி வேட்டி கட்ட தொடங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மதுரை ஆதீனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து மிரட்டி வருகிறார் மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும், அதேபோல் சிதம்பரம் கோவில் விவகாரத்தில் அமைச்சர் தலையிடுகிறார்' என அண்ணாமலை பேசினார் பேசினார்.