Kathir News
Begin typing your search above and press return to search.

மக்கள் மத்தியில் எந்த குழப்பமும் இல்லாமல் 370 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி உறுதி- அமித்ஷா!

மக்கள் மத்தியில் எந்த குழப்பமும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 370 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அமித்ஷா கூறினார்.

மக்கள் மத்தியில் எந்த குழப்பமும் இல்லாமல் 370 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி உறுதி- அமித்ஷா!

KarthigaBy : Karthiga

  |  15 Feb 2024 1:07 AM GMT

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சியில் ரூபாய் 1,950 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைத்த போது பேசியதாவது:-


பிரதமர் மோடியை மூன்றாவது முறையும் ஆட்சியில் அமர வையுங்கள். அவரது தலைமையில் நாடு மிக வேகமாக வளர்ச்சி அடையும். நான் கடந்த மாதம் 11 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்தேன். நாடாளுமன்ற தேர்தலில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் மக்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. எனவே வருகிற தேர்தலில் பா.ஜனதா மட்டும் 370 தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற மனநிலை நாடு முழுவதும் நிலவி வருகிறது .


அதே நேரம் தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும். பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு பணிகளை செய்து முடித்துள்ளார். கற்பனை செய்ய முடியாத இலக்குகளை நிறைவேற்றியுள்ளார். கடந்த 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடியை நாட்டின் பிரதமராக மக்கள் தேர்ந்தெடுத்தது குஜராத் மாடல் ஆட்சி தான் முக்கிய காரணம். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி நாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் திட்டத்தை வகுத்தார்.


இன்னும் 10 ஆண்டுகால ஆட்சிக்கு பிறகு 2047 ஆம் ஆண்டு இந்தியா உலகில் முதலிடத்தை எட்டும் என்று மக்கள் நம்புகிறார்கள். உலக அளவில் இந்திய பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது . பிரதமர் மோடி தலைமையிலான அரசு அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்தியது. இதன் மூலம் சுமார் 550 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளது. இவ்வாறு மத்திய மந்திரி அமித்ஷா பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News