Kathir News
Begin typing your search above and press return to search.

சவுதி அரேபியா: விமான நிலையத்தில் வெடிகுண்டு நிரப்பிய ட்ரோன் தாக்குதல்!

சவுதி அரேபியாவில் உள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சவுதி அரேபியா: விமான நிலையத்தில் வெடிகுண்டு நிரப்பிய ட்ரோன் தாக்குதல்!

ThangaveluBy : Thangavelu

  |  9 Oct 2021 11:16 AM GMT

சவுதி அரேபியாவில் உள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவி புரிந்து வருகிறது. ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று (அக்டோபர் 8) சவுதியின் தெற்கு நகரமான ஜிசானில் உள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட பயங்கர ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News