Begin typing your search above and press return to search.
யோகி ஆதித்யநாத்'க்கு வெடிகுண்டு மிரட்டல் - மர்ம நபரை வலைவீசி தேடும் போலீசார்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
By : Mohan Raj
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸஅப் எண்ணுக்கு ஒரு தகவல் வந்தது. அதில், முதல் மாதிரி யோகி ஆதித்யநாத் மீது இன்னும் மூன்று நாட்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல் கடந்த இரண்டாம் தேதி விடுவிக்கப்பட்டது தற்பொழுது தான் அது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளனர் போலீசார். இந்த மிரட்டல் குறித்து whatsapp உதவி என் சேவைக்கான அதிகாரி போலீசில் புகார் செய்தார் மேலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து யோகி ஆதித்தனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி கண்டுபிடிக்கும் பணிகள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story