Kathir News
Begin typing your search above and press return to search.

#Breaking : காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.! #Kashmir

#Breaking : காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.! #Kashmir

#Breaking : காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.! #Kashmir

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jun 2020 2:59 AM GMT

தெற்கு காஷ்மீர் அனந்தநாக் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மாநில போலீஸ் தனிப்படையினருடன் இணைந்து 19 ராஷ்டிரீய ரைபிள் படையினரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் இணைந்து நேற்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முன்னதாக அந்தப்பகுதியில் செல்போன் மற்றும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டது. குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதும் மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்

உடனே வீரர்கள் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி மசூத் அகமது பாதி என்றும் இவர் ஜம்முவின் தோடா பகுதியில் பயங்கரவாத அமைப்பை முன்னின்று நடத்தியவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்ட மசூத், பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டதாக தெரிகிறது. மற்ற 2 பேரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள். அதிலும் ஒருவர் மாவட்ட தளபதி என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் முக்கிய தளபதி உள்பட 116 பயங்கரவாதிகள் இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News