Kathir News
Begin typing your search above and press return to search.

"இந்தியாவை இரண்டாக பிரித்து ஒன்றை கிறிஸ்தவர்களிடம் ஒப்படையுங்கள்"-பாதிரியார் பேச்சால் அதிர்ச்சி!

Breaking News.

இந்தியாவை இரண்டாக பிரித்து ஒன்றை கிறிஸ்தவர்களிடம் ஒப்படையுங்கள்-பாதிரியார் பேச்சால் அதிர்ச்சி!

ShivaBy : Shiva

  |  28 Aug 2021 1:44 AM GMT

இந்தியாவை இரண்டாக பிரித்து கிறிஸ்தவர்களுக்கு என ஒரு தனிநாடு கொடுக்க வேண்டுமென்று கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பேசியுள்ளது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி இந்தியாவை இரண்டாக பிரித்து யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் சவுத் இந்தியா என்று பிரிக்க வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் திணித்து பிரிவினைவாதத்தை தூண்டிவிடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பைபிள் ஓபன் யுனிவர்சிட்டி இன்டர்நேஷனலின் (BOUI) துணை இயக்குநர் பாதிரியார் உபேந்திரா என்பவர் இந்தியாவைப் இரண்டாக பிரித்து கிறிஸ்தவர்களுக்கு ஒரு தனிநாடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

SC/ST உரிமைகள் பாதுகாப்பு என்ற அமைப்பு ஒன்று வீடியோ பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ பதிவில் BOUIஇன் துணை இயக்குநரும் மத போதகருமான உபேந்திரா "எங்களது தலைவர் சந்தர் ராவின் சீரிய வழிகாட்டுதல் அடிப்படையில் செயல்படும் நாங்கள் அனைத்திந்திய உண்மை கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பின் சார்பாக இந்தியாவை இரண்டாக கூறு போட்டு அதில் ஒரு பாதியை கிறிஸ்தவர்களுக்கு என தனி நாடாக கொடுத்து விடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டோம்" என்று பேசியுள்ளார்.

ஏற்கனவே விஜயகுமார் என்ற மத போதகரும் இதே போன்று பேசியது குறிப்பிடத்தக்கது. பாரத மாதாவுக்கு பல கணவர்கள் இருக்கிறார்களா என்று கீழ்த்தரமாக பேசியதற்காக கைது செய்யப்பட்ட அவர், பெயிலில் வெளியே வந்து இந்துக்கள் அனைவரும் நரகத்துக்கு செல்வார்கள் என்று சபித்ததோடு, இந்தியாவை இரண்டாகப் பிரித்து அதில் ஒரு பாதியை கிறிஸ்தவர்களுக்கு தனிநாடாக வழங்கிவிட வேண்டுமென்று பேசியது குறிப்பிடத்தக்கது.

Source : Hindu post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News