Kathir News
Begin typing your search above and press return to search.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் ! போக்சோவில் கைது செய்தது காவல்துறை !

Breaking News.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் ! போக்சோவில் கைது செய்தது காவல்துறை !

TamilVani BBy : TamilVani B

  |  18 Sep 2021 2:21 AM GMT

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. தெரிந்தவர்கள், உறவினர்கள் என அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்கள் என சில கொடூரர்கள் குழந்தைகள் மீது பாலியல் சீண்டல்களை செய்துவருகின்றனர்.

அதே போல தன்னை மனிதபுனிதராக காட்டிகொள்ளும் சில மதபோதகர்களும் இதில் இருப்பது தான் கொடுமையின் உட்சம். அப்படி ஒரு சம்பவம் திருப்பூரில் தற்போது நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், வீரபாண்டிய்ல் ஒரு சர்ச் உள்ளது. இதில் பிராத்தனை நடத்த வேண்டும் என்பதற்காக 17 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். அப்போது அவரிடன் அங்கிருந்த மதபோதகர் சாமுவேல் என்பவர் சர்ச் என்பதையும் மறந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்த செயலால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் இது பற்றி கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த மதபோதகரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்தது காவல்துறை. இது போன்று மதபோதகர் என்னும் போர்வையில் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் மனநோயாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News