Kathir News
Begin typing your search above and press return to search.

ஏவுகணைகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாங்க 14,000 கோடி-விரைவில் ஒப்புதல்!

Breaking News.

ஏவுகணைகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாங்க 14,000 கோடி-விரைவில் ஒப்புதல்!

ShivaBy : Shiva

  |  31 Aug 2021 6:06 AM GMT

14,000 கோடி மதிப்பில் 'ஆகாஷ் எஸ்' ஏவுகணைகள் மற்றும் 25 அதிநவீன 'துருவ் மார்க் - 3' இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதன் மூலம் 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு புதிய ஊக்கம் அளிக்கும் விதமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் லடாக் போன்ற குளிர் நிறைந்த பகுதியிலும் எதிரிகளை 25 முதல் 30 கிலோ மீட்டர் வரை சென்று துல்லியமாக தாக்க கூடிய 'ஆகாஷ் எஸ்' ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இதேபோல் 'துருவ் மார்க் - 3' என்ற அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆகாஷ் ஏவுகணை மற்றும் 25 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் இதற்கான முன்மொழிவு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த முன்மொழிவை உயர்நிலைக் கூட்டத்தில் விவாதித்து கூடிய விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு இந்தியாவில் உள்ள அனைத்து எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 14,000 கோடி மதிப்பிலான ஏவுகணைகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவம் வாங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Source: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News