Kathir News
Begin typing your search above and press return to search.

சரக்கு கப்பலை மீட்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பல்கேரிய அதிபர்!

சரக்கு கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்டதற்காக பிரதமர் மோடிக்கு பல்கேரிய அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

சரக்கு கப்பலை மீட்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பல்கேரிய அதிபர்!

KarthigaBy : Karthiga

  |  21 March 2024 8:33 AM GMT

சோமாலியா கடற்கொள்ளையர்களிடமிருந்து சரக்கு கப்பல் மற்றும் அதன் பணியாளர்கள் மீட்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்கேரியா அதிபர் ரூமென் ராதேவ் நன்றி தெரிவித்துள்ளார். மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி ரூயென் என்ற சரக்கு கப்பலையை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி கடத்திச் சென்றனர். கடந்த மூன்று மாதங்களாக அதனை தங்கள் கட்டுப்பாடில் வைத்திருந்தனர்.


இந்நிலையில் இந்திய கடற்படையின் ஐ. என்.எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் கடந்த சனிக்கிழமை ரூயென் சரக்கு கப்பலையும் அதன் 17 ஊழியர்களையும் பத்திரமாக மீட்டது. சுமார் 40 மணி நேரம் நடவடிக்கைக்கு பிறகு இந்த கப்பலும் அதன் பணியாளர்களும் மீட்கப்பட்டனர். மேலும் சோமாலியா கொள்ளையர்கள் 35 பேரை இந்திய கடற்படை சரணடைடையச் செய்தது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்கேரிய அதிபர் ரூமென் ராதேவ் நன்றி தெரிவித்துள்ளார் .


இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கடத்தப்பட்ட பல்கேரியா கப்பல் மற்றும் ஏழு பல்கேரிய குடிமக்கள் உள்ளிட்ட அதன் பணியாளர்களை மீட்ட இந்திய கடற்படையின் துணிச்சலான நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார். முன்னதாக பிரதமர் மோடிக்கு பல்கேரியாவின் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான மரியா கேப்ரியல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தார். இதற்கு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அளித்த பதில் அதுதான் நண்பர்கள் என்று கூறி இருந்தார்.


SOURCE :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News