Kathir News
Begin typing your search above and press return to search.

தண்ணீரே இல்லாமல் தாவரங்கள் வாழ முடியுமா? புதிதாக 62 தாவரங்கள் கண்டுபிடிப்பு

தண்ணீர் இல்லாமல் வாழக்கூடிய அரிய வகை புதிய தாவரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தண்ணீரே இல்லாமல் தாவரங்கள் வாழ முடியுமா? புதிதாக 62 தாவரங்கள் கண்டுபிடிப்பு

KarthigaBy : Karthiga

  |  4 Jun 2023 6:15 PM GMT

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உயிரியல் ஆய்வாளர்கள் 62 புதிய வகை தாவரங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த தாவரங்கள் கடுமையான நீர் இழப்பையும் தாங்க கூடியவை. வறட்சியைத் தாங்கும் வாஸ்குலர் இனத்தை சேர்ந்தவை. கடுமையான நீர் பற்றாக்குறை மத்தியிலும் இவை திறன் கொண்டவை என்று கூறியுள்ளனர்.


இந்த இன தாவரங்கள் தண்ணீரில்லா சூழலில் ஒட்டுமொத்தமாக அழிந்து விடுவதில்லை. வறட்சியையை தாக்குப் பிடித்துக் கொண்டு மீண்டும் தண்ணீர் கிடைக்கும்போது புத்துயிர் பெறும் ஆற்றல் கொண்டவை என்றும் அறியப்பட்டுள்ளது . புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தாவரங்கள் தண்ணீர் பற்றாக்குறைவு உள்ள விவசாயப் பகுதிகளில் பறந்த அளவிலான பங்களிப்பை கொண்டிருக்க கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள அகார்கர் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த தாவரங்களை கண்டறிந்துள்ளனர். புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த தாவர இனங்களில் 16 இந்திய இனங்கள் உள்ளன .12 இனங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு மட்டுமே சொந்தமானவை. அங்குதான் அவை வாழ்விடத்தை கொண்டுள்ளன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News