குத்துவிளக்கில் ஏற்றும் தீப முகங்களும் அதற்கான பலன்களும்
வீட்டின் பூஜையறையில் வைத்துள்ள குத்துவிளக்குகளில் ஏற்றப்படும் தீப முகங்களுக்கு தகுந்த பலன்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அது பற்றி பார்ப்போம்.
By : Karthiga
*ஒரு முகம்- குடும்பத்தில் மத்திமமான பலன் கிடைக்கும்.
*இரண்டு முகம் குடும்ப ஒற்றுமை, தன சேர்க்கை, செல்வாக்கு உண்டாகும்.
*மூன்று முகம் - காரிய வெற்றி, தைரியம், பராக்கிரமம் கிடைக்கும்.
*நான்கு முகம் - நிலம், வீடு, வாகனம், கால்நடை விருத்தி, வியாபாரம், அபிவிருத்தி, சௌபாக்கியம் உண்டாகும்.
*ஐந்து முகம் - அஷ்ட ஐஸ்வர்யம், உண்டாகும் மற்றும் சர்வ சித்தி குறைவில்லா பெருவாழ்வு உண்டாகும்.
வாரத்தில் ஒரு நாளாவது அதாவது வெள்ளிக்கிழமை அன்று மட்டுமாவது பசு நெய்யில் பஞ்சமுக தீபம் ஏற்றுவது நல்லது. தீபம் ஏற்றும் பெண்மணி திருமணமான பெண்ணாக இருந்தால் வளையல், மெட்டி ,புருவ மத்தியில் குங்குமம், நெற்றியின் வகிடில் குங்குமம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். தீபம் ஏற்றுவதற்கு முன்பு விளக்கை மஞ்சள், குங்குமம், சந்தனம், பூ கொண்டு அலங்கரிக்க வேண்டும். தீபம் ஏற்றும் போது கணபதி, குரு, லட்சுமி, சரஸ்வதி நவக்கிரகம், குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை நினைத்துக் கொள்ள வேண்டும்.