Kathir News
Begin typing your search above and press return to search.

தாஜ்மஹால் ரகசிய அறைகளை திறக்க கோரிய வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தாஜ்மஹாலில் மூடப்பட்டுள்ள 2 அறைகளை திறந்து ஆய்வு செய்யக் கோரிய மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை தள்ளுபடி செய்துள்ளது.

தாஜ்மஹால் ரகசிய அறைகளை திறக்க கோரிய வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Mohan RajBy : Mohan Raj

  |  12 May 2022 12:27 PM GMT

தாஜ்மஹாலில் மூடப்பட்டுள்ள 22 அறைகளை திறந்து ஆய்வு செய்யக் கோரிய மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை தள்ளுபடி செய்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் ஆக்ராவில் உள்ள புகழ்பெற்ற தாஜ்மஹால் உள்ளது, இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் பாரதிய ஜனதாவை சேர்ந்த ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, துறவியரும், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தாஜ்மஹால் ஒரு காலத்தில் புகழ்பெற்ற சிவன் கோவிலாக இருந்தது எனக் கூறி வருகின்றனர் 'தேஜோ மஹாலயா' என்ற பெயரில் இருந்த சிவன் கோவில்தான் 'தாஜ்மகால்' ஆக மாற்றப்பட்டது

இதற்கு வரலாற்று ஆசிரியர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தாஜ் மஹாலின் உள்ளே 22 அறைகள் மூடி வைக்கப்பட்டுள்ளன, அங்கு ஹிந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அறைகளின் கதவுகள் பூட்டப்பட்டு உள்ளன எனவும் இந்திய தொல்லியல் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது.


மூடப்பட்ட அறைகளுக்குள் என்ன உள்ளது என்பதை அறிய வேண்டும் உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து மூடப்பட்டுள்ள அறைகளை திறந்து ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம் 22 அறைகளை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News