ஜல்ஜீவன் திட்டத்தில் மத்திய அரசின் சாதனை - இத்தனை கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பா?
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 12 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
By : Karthiga
கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியாக குடிநீர் வசதி அளிக்க 'ஜல்ஜீவன்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 2024 - ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மொத்தம் உள்ள 19 கோடியே 44 லட்சம் கிராமப்புற வீடுகளில் இதுவரை 12 குடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயத்தில் உத்தரபிரதேசம் ராஜஸ்தான் உட்பட ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான வீடுகளில் தான் குடிநீர் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த அளவாக லட்சத்தீவில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு சதவீதம் பூஜ்ஜியமாக உள்ளது .
நாடு முழுவதும் ஒன்பது லட்சத்து 6,846 பள்ளிகளுக்கும், 9 லட்சத்து 39 ஆயிரத்து 909 அங்கன்வாடி மையங்களுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது மேகாலயாவில் குறைந்த அளவாக 57 சதவீத பள்ளிகளுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.