Kathir News
Begin typing your search above and press return to search.

50 கோடியை கடந்து மத்திய அரசின் ஜன்தன் கணக்குகள் சாதனை

ஜந்தன் கணக்குகள் 50 கோடியை கடந்திருப்பது முக்கியமான சாதனை என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

50 கோடியை கடந்து மத்திய அரசின் ஜன்தன் கணக்குகள் சாதனை

KarthigaBy : Karthiga

  |  20 Aug 2023 5:00 PM GMT

நாட்டு மக்கள் அனைவரும் வங்கி சேவையை பயன்படுத்தவும் அரசின் மானியங்கள் மற்றும் திட்டங்கள் நேரடியாக மக்களை சேரவும் ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கும் திட்டம் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளை நினைக்க தற்போது 50 கோடியை கடந்துவிட்டதாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. இதில் 56 சதவீதம் பெண்களுக்கு உரியது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடிக்கு மேல் உயர்ந்திருப்பதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது ஒரு முக்கியமான மைல்கல் சாதனை என்றும் அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடிக்கு மேல் சென்றதும் இதில் பாதிக்கும் மேற்பட்ட கணக்குகள் மகளிருக்கு சொந்தமானது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 67 கணக்குகள் கிராமப்புற மற்றும் நடுத்தர நகர்புற பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளதால் நிதி சேர்க்கையின் பலன்கள் நாட்டின் ஒவ்வொரு மூலையும் சென்றடைவதை நாம் உறுதி செய்கிறோம் என புகழாரம் சூட்டியுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News