Begin typing your search above and press return to search.
அரசு இல்லத்தை காலி செய்து குடும்பத்துடன் வெளியேறிய உத்தவ் தாக்ரே - பதவி பறிபோகிறதா?
அரசு இல்லத்தில் இருந்து குடும்பத்துடன் வெளியேறினார் முதல்வர் உத்தவ் தாக்கரே.

By :
அரசு இல்லத்தில் இருந்து குடும்பத்துடன் வெளியேறினார் முதல்வர் உத்தவ் தாக்கரே.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால் நேற்று மகாராஷ்டிர மாநில முதல்வரும் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
மேலும் மகாராஷ்டிர மாநில மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் உதவி தாக்ரே'விற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காரணத்தினால் பெரும்பாலான எம்.எல்.ஏ'க்கள் அவர் வசம் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தனது குடும்பத்தாருடன் அரசு இல்லத்தில் இருந்து வெளியேறினார், விரைவில் ஆட்சி கவிழும் சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது.
Next Story