Kathir News
Begin typing your search above and press return to search.

சீ கிறிஸ்தவ பாதிரியார் பண்ணும் செயலா இது? கைது பண்ண தனிப்படை அமைப்பு!

சமூக வலைத்தளங்களில் உல்லாச வீடியோ விவகாரத்தில் தொடர்புடைய கிறிஸ்தவ பாதிரியார் தலை மறைவு.

சீ கிறிஸ்தவ பாதிரியார் பண்ணும் செயலா இது? கைது பண்ண தனிப்படை அமைப்பு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 March 2023 1:56 AM GMT

குமரி மாவட்டம் விலவங்கோடு பகுதியை சேர்ந்தவர்தான் கிறிஸ்த பாதிரியார் பெனெட்டிக் ஆண்ட்ரூ என்பவர். இவர் அங்கு இருக்கும் சர்ச் ஒன்றை பாதிரியாராக தேவாலயத்தில் பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளாகவே இவர் அங்கு பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகளை பதிவிட்டு இருக்கிறார். இதன் காரணமாக பெரும் சர்ச்சைக்குரிய நபராகவே இவர் மாறி இருக்கிறார்.


குறிப்பாக அந்த வீடியோவில் இவர் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளை பதிவிட்டு இருக்கிறார். அது மிகவும் வைரலானது குறிப்பாக பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், whatsapp சாட்டிங் பதிவுகள் போன்றவை மிகவும் வைரலாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் சில பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ எடுத்தும், வீடியோக்களை எடுத்த அவர்களை மிரட்டி உல்லாசமாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டு இருக்கிறது. இல்லகில் பேச்சுப் பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி நாகர்கோவிலில் உள்ள சைபர் கிரைம் போலீசில் தற்போது புகார் ஒன்றை அழுத்திருக்கிறார்.


அதில் பாதிரியார் தனக்கு whatsapp மூலமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இதன் பெயரில்தான் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த தகவலை எப்படியோ அறிந்து கொண்ட அவர் தலைமறைவாகிவிட்டார். கேரளா மாநிலத்தில் உள்ள தன்னுடைய நண்பர் வீட்டில் பதுங்கி இருக்கலாம், இதன் காரணமாக இரண்டு தனிப்படை குழு அமைக்கப்பட்டு அவரை தேடுவதற்கான செயலில் சைபர் கிரைம் போலீசார் இறங்கி இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Hindu News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News