எல்லையில் இந்திய விமான படையை கண்டு பயந்து ஓடிய பாகிஸ்தான் விமான படை ! தயார் நிலையில் இந்திய படைகள் , எல்லையில் பதற்றம் !
எல்லையில் இந்திய விமான படையை கண்டு பயந்து ஓடிய பாகிஸ்தான் விமான படை ! தயார் நிலையில் இந்திய படைகள் , எல்லையில் பதற்றம் !
By : Kathir Webdesk
இன்று இந்திய விமான படை, இந்தியா பாகிஸ்தான் எல்லையை கடந்து பாகிஸ்தான் நாட்டிற்குள் சென்று பயங்கரவாத முகாம்களில் 1000 கிலோ வெடிகுண்டை வீசியுள்ளது. ஊடகங்கள் அறிவிப்பு படி 200-300 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர் என்று பேச படுகிறது. இந்த விமான தாக்குதல் நடந்த பல்கோட் என்னும் இடம் பாகிஸ்தானின் கைபேர் பக்துனவா என்னும் மாநிலத்தில் உள்ளது. இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இல்லை, பாகிஸ்தானின் முக்கியமான பகுதியிலே உள்ளது. இந்த இடத்திற்கே இந்திய விமான படை சென்று தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் அரசும் ராணுவமும் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். தாக்குதல் நடந்தபொழுது இந்திய விமான படையின் பலத்தை கண்டும், அதனின் போர்த் திறம் வாய்ந்த உருவாக்கத்தை கண்டு, தன பலவீனத்தை உணர்ந்து அதனை எதிரிக்கு வந்த பாகிஸ்தான் விமான படை பின்வாங்கியது. இதனால் பாகிஸ்தான் அரசும் ராணுவமும் திருப்பி விமான படை மூலம் இந்தியா உள்ளே வந்தும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்தியா தன் எல்லை பகுதியில் ராணுவ இருப்பை மிகவும் அதிகப்படுத்தியுள்ளது.