Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீர்: ஸ்ரீநகரில் மறைந்திருந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீர்: ஸ்ரீநகரில் மறைந்திருந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீர்: ஸ்ரீநகரில் மறைந்திருந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jun 2020 11:17 AM GMT

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரில் பகுதியில் ஒரு வீட்டில் மறைந்திருந்த மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

ஸ்ரீ நகரின் ஜதிபால் பகுதியில் தீவிரவாதிகள் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவ;லை கொண்டு தேடுதல் வேலையை பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கொண்டனர். அந்த சமயத்தில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் மறைந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த வீட்டை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். பின்பு அவர்களை சரண் அடையுமாறு பாதுகாப்பு படை வீரர்கள் வேண்டுகோள் வைத்தும் தீவிரவாதிகள் ஏற்கவில்லை. பிறகு இரு தரப்பினர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அந்த சண்டையின் முடிவில் மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த மூன்று தீவிரவாதிகளில் ஒருவன் கடந்த மாதம் 2 எல்லை பாதுகாப்பு வீரர்கள்(BSF) மீது நடைபெற்ற தாக்குதலில் தொடர்பு கொண்டவன் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News