Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா சாத்தானிடம் இருந்து விடுதலை பெற்று விட்டோம் தான்சானிய அதிபர் ஜான்மகுபூலி தகவல்.!

கொரோனா சாத்தானிடம் இருந்து விடுதலை பெற்று விட்டோம் தான்சானிய அதிபர் ஜான்மகுபூலி தகவல்.!

கொரோனா சாத்தானிடம் இருந்து விடுதலை பெற்று விட்டோம் தான்சானிய அதிபர் ஜான்மகுபூலி தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jun 2020 3:14 AM GMT

நம்ம ஊர் இஞ்சி பூண்டு எலுமிச்சையை வேகவைக்காமல் சாப்பிட்டு கொரோனாவை ஒழிக்கும் மருந்து என கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான்சானியா அதிபர் ஜான்

தான்சானியா அதிபர் தனது பேரக்குழந்தைக்கு இஞ்சி பூண்டு எலுமிச்சைபழம் கொடுத்து பரிசோதனை செய்து உலக சுகாதார அமைப்பை கடுமையாக சாடினார்

கொரோனாவால் பாதிக்கபட்ட பேரக்குழந்தை இஞ்சி பூண்டு எலுமிச்சை பழம் சாப்பிட்டு மீண்டதை உலகுக்கு துணிவுடன் வெளிப்படுத்தியவர் தான் அதிபர் ஜான்

தங்கள் நாடு கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று விட்டதாக தான்சானியா அதிபர் அதிபர் ஜான் மகுபூலி அறிவித்துள்ளார்.

உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.

நியூசிலாந்து, வாடிகன், ஃபிஜி போன்ற நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து வென்று விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

தான்சானியாவும் தற்போது இணைந்துள்ளது. ஏப்ரல் 29-க்கு பின்னர் கொரோனா தொடர்பான எந்த புள்ளி விபரத்தையும் தான்சானியா வெளியிட வில்லை.

அன்றைய நாளின்படி அங்கு 509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் 29 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் அந்நாடு கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளதாக அதிபர் ஜான் மகுபூலி அறிவித்துள்ளார்.

சாத்தானின் வேலையை தான்சானியா தோற்கடித்து விட்டதாகவும் அதிபர் ஜான் மகுபூலி அ கூறியுள்ளார்.

பரிசோதனைக் கருவிகளின் தவறால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க நேர்ந்தது என்றும் அதிபர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News