Kathir News
Begin typing your search above and press return to search.

பேய்க்கதையின் மூலம் வெப்சீரிஸில் நடிக்கப்போகும் வைகைப்புயல் வடிவேலு - இயக்குநர் சுராஜ் தகவல்.!

பேய்க்கதையின் மூலம் வெப்சீரிஸில் நடிக்கப்போகும் வைகைப்புயல் வடிவேலு - இயக்குநர் சுராஜ் தகவல்.!

பேய்க்கதையின் மூலம் வெப்சீரிஸில் நடிக்கப்போகும் வைகைப்புயல் வடிவேலு - இயக்குநர் சுராஜ் தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 12:21 PM GMT

நடிகர் வடிவேலு மிகப்பெரிய காமெடி நடிகர். இவருடைய காமெடியை பார்த்து சிரிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் வெளிவரும் மீம்ஸ் மூலம் மிகவும் வைரல் ஆகி வருகிறார்.

இவர் இம்சை அரசன் படத்தின் பிரச்சனைக்குப் பிறகு புதிய படங்களில் நடிப்பதற்கு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை அடுத்து உலக நாயகன் கமல் நடிக்கும் தலைவன் இருக்கிறான் படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வைகைப்புயல் வடிவேலு வெப்சீரிஸ்ல் நடிக்க போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வடிவேலுவின் நகைச்சுவை வாழ்க்கையில் இன்னும் கூட மறக்க முடியாத நிறைய காமெடி கதாபாத்திரங்களை கொடுத்தவர் இயக்குனர் சுராஜ். இந்த வெப்சீரிஸ்ஸை இவர் இயக்குகிறார்.

முதலில் படமாக தயாரிக்க தான் சுராஜ் உருவாக்கி இருக்கிறார். ஆனால், தற்போது முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆகியோர் வெப்சீரிஸ்ல் ஆர்வமாக இருப்பதால் இதை வெப்சீரிஸ்சாகவே தயாரிக்கலாம் என வடிவேலு தெரிவித்து இருக்கிறார். இதற்கு இயக்குனர் சுராஜும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இதனால் இதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறார்கள்.

இந்தக் கதை அம்சம் காமெடி கலந்த பேய்கதையாம். இது வெப்சீரிஸ்ல் ஒன்பது எபிசோட்களாக தயாரிக்கப்படுகிறது. ஆனால், இதுவரை இந்த வெப்சீரிஸுக்கு பெயர் தேர்ந்தெடுக்கவில்லை. மேலும், அமேசான், ஹாட்ஸ்டார் ஆகிய நிறுவங்களிடம் வடிவேலு பேசி வருகிறார் என கூறப்படுகிறது. இது எந்த நிறுவனத்தில் வெளியாகும் என்பது உறுதி செய்யப்படவில்லை இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த வைகைப் புயல் வடிவேலுவின் ரசிகர்கள் மிக மகிழ்ச்சியில் உள்ளனர். இதை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News