சுஷாந்த் தற்கொலை வழக்கில் அவர் காதலி மீது வழக்குப்பதிவு.!
சுஷாந்த் தற்கொலை வழக்கில் அவர் காதலி மீது வழக்குப்பதிவு.!
By : Kathir Webdesk
கடந்த மாதம் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது சினிமா பிரபலங்கள் இடையேவும் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர் தற்கொலை குறித்து பல பிரபலங்கள் இது தற்கொலை அல்ல எனவும் கூறிவந்தனர். மேலும் பாலிவுட்டில் நடிகர்கள் வாரிசுகளுக்கு மட்டுமே முன்னுரிமை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் இது குறித்து சில பிரபலங்களின் மீது வழக்கு பதிவு போடப்பட்டிருந்தது. மேலும் சுஷாந்த் இன் காதலி Rhea அமித்ஷா அவர்கள் வழக்கை சிபிஐக்கு மாற்றும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் வழக்கில் தற்போது திருப்புமுனையாக Rhea மீது எப்ஐஆர்(FIR) பதிவு போடப்பட்டுள்ளது. இதை சுஷாந்த் தந்தை அளித்த புகாரில் பெயரிடப்பட்டிருக்கிறது. இவர் கொடுத்த புகாரில் சுஷாந்த் காதலி அவரிடம் பண மோசடி செய்ததாகவும் அதனாலே சுஷாந்த்திற்கு மன உளைச்சல் ஆனதால் தற்கொலை மேற்கொண்டுள்ளார் என்று அவர் தந்தை கூறியுள்ளார். 2009ம் ஆண்டு வரை இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் வந்ததில்லை. ஆனால் சுஷாந்த் உறவை Rhea முடித்துக் கொண்ட போது 15 கோடி பணம்,லேப்டாப் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றை அவர் மோசடி செய்து விட்டதாகவும் அவர் கூடவே எடுத்துச் சென்று விட்டதாகவும் சுஷாந்த் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
சுஷாந்த் மரணம் நடந்து நிறைய நாட்கள் ஆன பின்பு இப்பொழுது உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர் அவர் குடும்பத்தினர் மேலும் விசாரணை நடந்து முடிந்த பின்புதான் என்னதான் ஆயிற்று என்று முழுமையாக தெரியவரும். மேலும் இதுகுறித்து போலீசார் முழு விசாரணையில் இறங்கியுள்ளனர்.