Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளை சரமாரியாக கேள்வி எழுப்பிய ஆளுநர் கிரண் பேடி!

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளை சரமாரியாக கேள்வி எழுப்பிய ஆளுநர் கிரண் பேடி!

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளை  சரமாரியாக கேள்வி எழுப்பிய ஆளுநர் கிரண் பேடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 July 2020 12:28 PM GMT

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று திடீரென ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம் கொரோனா குறித்து தனக்கு ஒரு வாரமாக தகவல் தராதது ஏன்? என கேட்டார். மேலும் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்கிறீர்களா? அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் தேவையான உத்தரவுகளை தினமும் அளிக்கிறீர்களா? என்ன என கேட்டார்.

இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் தினமும் அரசுக்கும், சுகாதார மையங்களுக்கும் அளிக்கும் தகவல்களை நகலெடுத்து கொடுத்தனர். அப்போது கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பாளராக இருக்கும் அதிகாரி யார்? என கேட்டு அவரை வரச்சொன்னார். அதன்படி கட்டுப்பாட்டு மைய பொறுப்பாளரான துணை இயக்குனர் ரகுநாதன் அங்கு வந்தார்.

அவரிடம் சரமாரியாக துணைநிலை ஆளுநர் பல கேள்விகளை கேட்டார். அவர் தெரிவித்த பதில்களுக்கு திருப்தி அடையாமல், 'செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருங்கள். மக்களுக்கு உண்மையாக பணியாற்றுங்கள்' என கவர்னர் ஆவேசமாக கூறினார். ஒரு மணி நேரமாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து சென்றார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News