கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் கருப்பர் கூட்டத்திற்கு எதிராக அரசுடன் கை கோர்த்த நடிகர் ரஜினி.!
கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் கருப்பர் கூட்டத்திற்கு எதிராக அரசுடன் கை கோர்த்த நடிகர் ரஜினி.!

கடவுள் முருகனின் பக்தர்களால் புனிதமாக போற்றப்பட்டு வரும் கந்த சஷ்டி கவசத்தில், தவறான வார்த்தைகள் உள்ளதாக கூறி, கறுப்பர் கூட்டம் என்கிற ஊடகம் ஒன்று, மிகவும் கேவலமாக கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்தது. இதற்கு எதிராக பல நடிகர்களும் அரசியல்வாதிகளும் குரல் கொடுத்திருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது ரஜினிகாந்த் அதிரடி ட்விட் ஒன்றை போட்டு 5 நிமிடத்தில் அதிரடி காட்டியுள்ளார்.
கறுப்பர் கூட்டத்தை விமர்சித்து, பல இந்து மக்களின் மனதை புண் படுத்தும் விதத்தில் அமைந்ததால் இதற்க்கு எதிராக பலர் தொடர்ந்து தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உடல் உறுப்புகளை பற்றி இதில் கூறப்பட்டுள்ளதில் என்ன ஆபாசம் இருக்கிறது என பல்வேறு, விளக்கமும் கொடுத்து வந்தனர்.அந்த தரப்பினர். இதையடுத்து கறுப்பர் கூட்டம் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது, மத கலவரத்தை துாண்ட முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும் செந்தில்வாசன், சுரேந்தர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து கருப்பர் கூட்டம் வீடியோ தயாரிக்கும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த அலுவலகம் தி நகரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படி தரைகுறைவாக விமர்சிக்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் நீக்கியுள்ளனர்.
இதனை அடுத்து ரஜினிகாந்த் தமிழக அரசு இவ்வாறு செய்த நடவடிக்கைக்கு டுவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். இந்த பதிவில் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்கு தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள் என்று குறிப்பிட்டிருந்தார்.
#கந்தனுக்கு_அரோகரா pic.twitter.com/zWfRVpufXk
— Rajinikanth (@rajinikanth) July 22, 2020
இந்த பதிவுக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, அணைத்து தரப்பு ரசிகர்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.