Begin typing your search above and press return to search.
புதுச்சேரி : கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட புதுச்சேரி சட்டமன்றம்.!
புதுச்சேரி : கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட புதுச்சேரி சட்டமன்றம்.!

By :
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனிடையே கூட்டத்தில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 25ஆம் தேதி சட்டசபை வளாகத்தின் மாமன்றம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டு, மேலும் பட்ஜெட் கூட்டம் திறந்தவெளியில் மரத்தடியில் நடைபெற்றது, அப்போது பணியில் இருந்த 2- சபை காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சபை காவலர்களுக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சட்டமன்ற வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது, இதனால் வரும் புதன்கிழமை காலை வரை சட்டமன்ற வளாகம் மூடப்பட்டுள்ளது.
Next Story