புதுச்சேரி : நாத்திகன் சுரேந்தருக்கு அடைக்கலம் கொடுத்தது முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு - பா.ஜ.க. குற்றச்சாட்டு.!
புதுச்சேரி : நாத்திகன் சுரேந்தருக்கு அடைக்கலம் கொடுத்தது முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு - பா.ஜ.க. குற்றச்சாட்டு.!
By : Kathir Webdesk
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கந்தசஷ்டி கவசம் மற்றும் தமிழ் கடவுளான முருகன் குறித்து அவதூறாக விமர்சனம் செய்த கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் தமிழகத்தில் இருந்து இ-பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்கு மருத்துவம் பார்க்க வந்த அவர்கள் மீது வழக்கு போடும் புதுச்சேரி காவல்துறையினர் சென்னையில் தேடப்படும் குற்றவாளியான நாத்திகன் சுரேந்திர் இ-பாஸ் இல்லாமல் வந்து 3நாட்கள் தலைமறைவாக இருந்துள்ளார் இதற்கு இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் திமுக துணையுடன் ஆட்சி நடத்தும் புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், நாத்திகன் சுரேந்திருக்கு முதலமைச்சர் நாராயணசாமி அரசு அடைக்கலம் கொடுத்தது எனவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்