Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவால் மளிகைக்கடை வைத்த இயக்குனர்.!

கொரோனாவால் மளிகைக்கடை வைத்த இயக்குனர்.!

கொரோனாவால் மளிகைக்கடை வைத்த இயக்குனர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 July 2020 11:59 AM GMT

தமிழகம் முழுவதும் கொரோனா அசுர வேகத்தில் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து தொழில் துறையிலும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் சினிமா துறையிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது இதனால் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமாத்துறையில் பலரும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் சினிமா துறையினர் பலரும் வேறு தொழில்கள் செய்ய இறங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் நானும் ஒரு பேய், ஒரு மழை நான்கு சாரல், பாரதிபுரம், மவுன மழை ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் "ஆனந்த்" இவர் முகலிவாக்கத்தில் மளிகை கடை ஒன்றை திறந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது நண்பர் ஒருவரின் இடத்தை வாங்கி அங்கு மளிகை கடை ஒன்றை திறந்துள்ளார். இங்கு குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பதாகவும் இந்த கஷ்ட காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில் இதனை ஒரு சேவையாகவும் செய்து கொண்டு வருகிறாராம்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News