Kathir News
Begin typing your search above and press return to search.

போலீசில் நடிகை வனிதாவின் மீது புகார் அளித்த சூர்யா தேவி.!

போலீசில் நடிகை வனிதாவின் மீது புகார் அளித்த சூர்யா தேவி.!

போலீசில் நடிகை வனிதாவின் மீது புகார் அளித்த சூர்யா தேவி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 July 2020 1:33 PM GMT

நடிகை வனிதா ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அன்றிலிருந்து ஆரம்பித்த பிரச்சினை என்ற முடியாத நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே 2 முறை திருமணமாகி முதல் கணவருக்கு இரண்டு குழந்தைகளும் இரண்டாவது கணவருக்கு ஒரு குழந்தையும் உள்ளனர். பீட்டர் பால் என்பவரை அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்ட வனிதாவின் மீது பீட்டர் பாலின் முதல் மனைவி புகார் அளித்துள்ளார். அதை அடுத்து இரண்டாவதாக சூர்யா தேவி என்ற பெண்ணும் அது மீது புகார் அளித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து எலிசபெத்துக்கு ஆதரவாக யூட்யூப் பிரபலமான சூர்யா தேவி என்பவரும் தயாரிப்பாளர் ரவீந்தரும் கருத்து தெரிவித்தனர். சூர்யாதேவி வனிதாவை தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். இதனால் கடுப்பான வனிதா சூர்யா தேவி மற்றும் ரவீந்தர் மீது நேற்று முன்தினம் போலீஸில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து இன்று சூர்யா தேவி வனிதா என்னை அவதூறாக பேசி வருவதாகவும், கொச்சையான வார்த்தைகள் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருவதாகவும், இந்நிலையில் வனிதா மீது வடபழனி போலீஸில் புகார் அளித்துள்ளார் சூர்யா தேவி. மேலும் என் மனம் புண்படும்படி அவதூறு வார்த்தைகளையும் பரப்பி வருவதாக இவர் தெரிவித்திருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News