Kathir News
Begin typing your search above and press return to search.

இளம் தலைவர்களை வரிசையாக இழக்கும் காங்கிரஸ் - மூத்த தலைவர்கள் வேதனை.!

இளம் தலைவர்களை வரிசையாக இழக்கும் காங்கிரஸ் - மூத்த தலைவர்கள் வேதனை.!

இளம் தலைவர்களை வரிசையாக இழக்கும் காங்கிரஸ் - மூத்த தலைவர்கள் வேதனை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 July 2020 6:44 AM GMT

காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று ரகஸ் தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறி வந்த நிலையில் நேற்று அவரை கட்சியில் இருந்து நீக்க காங்கிரஸ் செயற்குழு அதிரடியாக அறிவித்தது. எதிர்காலத்தில் ராகுல்காந்தி பிரதம மந்திரி ஆவதற்கு இந்த இளம் தலைவர்கள் தான் பெரிய பக்கபலமாக இருப்பார்கள் என்று பலரும் நினைக்கின்றனர் ஆனால் கட்சியில் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காததால் அனைத்து இளம் தலைவர்களும் விலகி வருகின்றனர் இதனால் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூத்த காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதா நேற்று சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக ட்வீட் செய்து, "சச்சின் பைலட் ஒரு சக ஊழியர் மட்டுமல்ல, எனது நண்பரும் தான். இத்தனை ஆண்டுகளாக அவர் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் என்ற உண்மையை யாரும் பறிக்க முடியாது. நிலைமையை இன்னும் காப்பாற்ற முடியும் என்று உண்மையிலேயே நம்புகிறேன் ட்விட்டரில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் தலைவர் பிரியா தத் ட்விட்டரில் "மற்றொரு நண்பர் கட்சியை விட்டு வெளியேறுகிறார் சச்சின் மற்றும் ஜோதிராஜ்யா இருவரும் சகாக்கள் & நல்ல நண்பர்கள் துரதிர்ஷ்டவசமாக எங்கள் கட்சி 2 உறுதியான இளம் தலைவர்களை இழந்துவிட்டது சாத்தியமான. லட்சியமாக இருப்பது தவறு என்று நான் நம்பவில்லை. அவர்கள் மிகவும் கடினமான காலங்களில் கடுமையாக உழைத்துள்ளனர்… இந்த உள் கிளர்ச்சியை உருவாக்குவது என்ன என்பதைப் புரிந்துகொள்ள கட்சி ஆராய வேண்டும். "

சஷி தரூரும் வெளியேறியது குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார், திருவனந்தபுரம் எம்.பி., "சச்சின் பைலட் ஐ.என்.சி.யை விட்டு வெளியேறுவதைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன். அவரை எங்கள் சிறந்த மற்றும் பிரகாசமான ஒருவராக நான் கருதுகிறேன், இது வரவில்லை என்று விரும்புகிறேன். பிரிந்து செல்வதற்குப் பதிலாக, கட்சியை அவரது மற்றும் எங்கள் கனவுகளுக்கு சிறந்த மற்றும் சிறந்த கருவியாக மாற்றுவதற்கான முயற்சியில் அவர் இணைந்திருக்க வேண்டும். "

என சச்சின் பைலட் இருக்கு ஆதரவாக பல காங்கிரஸ் தலைவர்கள் டிவிட் போட்டு வருகிறார்கள்.

காங்கிரஸ் செயற்குழு ஒரு சர்வாதிகாரம் போல் செயல்படுகிறது குடும்ப அரசியலை பின்பற்றி வருவதால் இப்பொழுது பல இளம் காங்கிரஸ் தலைவர்களை கைவிடுகிறது பல காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கட்சியிலிருந்து விலக தொடங்கியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News