Kathir News
Begin typing your search above and press return to search.

தெலுங்கு பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னை தமிழ் பெண்ணாக மாற்றிக் கொண்டார் - மீரா மிதுன் சர்ச்சை ட்விட்.!

தெலுங்கு பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னை தமிழ் பெண்ணாக மாற்றிக் கொண்டார் - மீரா மிதுன் சர்ச்சை ட்விட்.!

தெலுங்கு பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னை தமிழ்  பெண்ணாக மாற்றிக் கொண்டார் - மீரா மிதுன் சர்ச்சை ட்விட்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 July 2020 7:19 AM GMT

மீரா மிதுன் என்றாலே சர்ச்சைதான். இவர் தற்போது பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அதற்கு எடுத்துக்காட்டாக நடிகை திரிஷா, நடிகர் விஜய், நடிகர் ரஜினி ஆகியோர் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதற்கு முன்பு இருந்து பல சர்ச்சைகளில் சிக்கியவர்.

இவர் 2016ல் மிஸ் தென்னிந்தியா பட்டம் வென்ற மீரா மிதுன் தனக்கு திருமணமானதை மறைத்து விட்டார் எனக் கூறி அவரது பட்டம் திரும்ப பெறப்பட்டதாக கூறப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்,

இயக்குனர் சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என அவர் பொய்யான புகார் கூறியது கடும் எதிர்ப்புகளை அவருக்கு பெற்றுத் தந்தது. அதனை தொடர்ந்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் தாக்கி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மீரா மிதுன். "தெலுங்கு பெண்" தமிழ் என சொல்லி அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

மேலும் அனைவரிடமும் தான் மிகவும் கஷ்டப்பட்டு வந்தவர் என்ன சிம்பதி உருவாக்குகிறார். அனைத்து தமிழர்களையும் அவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவரும் ஒரு Nepotism product தான். ஏமாற்றுவதற்கு என்ன ஒரு புதிய டெக்னிக் "ஐஸ்வர்யா ராஜேஷ்" என மீரா மிதுன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி மீரா பேசி இருப்பதற்கும் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இவர் போஸ்ட் இருக்க பலரும் பல விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.முக்கியமாக சொல்லப்போனால் அவரை கலாய்த்து வருகின்றனர்.

மேலும் தனது ட்வீட்டில் எப்போதும் பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து பதிவிடும் மீரா மிதுன், இதில் மட்டும் ஏன் குறிப்பிடவில்லை என சிலர் கிண்டலாக கேட்டிருக்கிறார்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News