Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி.!

புதுச்சேரி : முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி.!

புதுச்சேரி : முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2020 11:33 AM GMT

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் 113 நபர்களுக்கும்,காரைக்காலில் 3 நபர்களுக்கும், ஏனாமில் 23 நபர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1055 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 1561 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்,புதுச்சேரியில் 2 நபர்களும் , ஏனாம் பகுதியில் 1 நபரும் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு . தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2654ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடரில் 3 நாட்கள் பேரவை நிகழ்வுகளில் எம்.எல்.ஏ ஜெயபால் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News