Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா காரணமாக பிரபல சீரியலில் இருந்து நீக்கப்பட்ட இரண்டு நடிகைகள்.!

கொரோனா காரணமாக பிரபல சீரியலில் இருந்து நீக்கப்பட்ட இரண்டு நடிகைகள்.!

கொரோனா காரணமாக பிரபல சீரியலில் இருந்து நீக்கப்பட்ட இரண்டு நடிகைகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 July 2020 11:34 AM GMT

கொரோனா பிரச்சனையால் நிறுத்தப்பட்டிருந்த சீரியல் ஷூட்டிங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் குறைந்த ஆட்களை வைத்து இந்த சீரியல்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா விதிமுறைகள் என பல சிக்கல்கள் இருந்தாலும் சின்னத்திரை ரசிகர்களுக்காக பிரபல தொலைக்காட்சிகள் அனைத்தும் பணியை தொடங்கிவிட்டன. இந்நிலையில்கொரோனா காரணமாக மார்ச் மாத இறுதியுடன் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஷூட்டிங் இல்லை என்பதாலும், லாக்டவுனுக்கு பயந்தும் சீரியல் நடிகர், நடிகைகள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.

அப்படி போனவர்கள் உடனடியாக வர முடியாத காரணத்தினால் பல சீரியலில் இருந்து பல நடிகர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "நாம் இருவர் நமக்கு இருவர்" சீரியல் நடித்த ரக்‌ஷா, ரேஷ்மி இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.

லாக்டவுன் அறிவித்தவுடன் ரக்‌ஷா தனது சொந்த ஊரான பெங்களூரு திரும்பியுள்ளார். அங்கிருந்து உடனடியாக வர முடியாத காரணத்தினாலும் E-pass கிடைக்காததாலும்,கொரோனாவின் தீவிரம் அதிகமாக இருப்பதால் பெற்றோர் ஷூட்டிங்கிற்கு செல்ல அனுமதிக்காததால் அவர்கள் வர முடியவில்லை.ஆனால் படப்பிடிப்பு குழுவோ அவருக்கு பதிலாக வேறொரு நடிகையை போட்டு ஷூட்டிங்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News