Kathir News
Begin typing your search above and press return to search.

சீனாவில் முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த உய்கூர் இன பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை - ஐ.நா.சபை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை.!

சீனாவில் முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த உய்கூர் இன பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை - ஐ.நா.சபை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை.!

சீனாவில் முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த உய்கூர்  இன பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை - ஐ.நா.சபை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 July 2020 11:27 AM GMT

சீனாவில் ஏற்கனவே மக்கள் தொகை கட்டுப்பாடு மிகவும் கறாராக உள்ளது. என்றாலும் ஜின்ஜியாங்சில உள்ளிட்ட சில மாநிலங்களில் கட்டுப்பாட்டை மீறி பெருகி வரும் இஸ்லாமியர்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, அந்த சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். உய்குர் பிரிவு இஸ்லாமியர்களான இவர்களின் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்க்ளுக்கு சீன அரசு கட்டாயமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அட்ரியன் ஜென்ஸ் என்ற நிபுணர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சீனாவின் மோசமான இந்த செயல் குறித்து ஐ.நா.சபை விசாரிக்க வேண்டும் என்ற சர்வதேச அளவில் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இந்த ஆய்வறிக்கையில் உள்ளவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று சீனா மறுத்து வருகிறது. ஆனால், தங்களுக்கு அளிக்கப்பட்ட மருந்துகளால் தங்களின் மாதவிடாய் நின்றுபோனதாக, ஜின்ஜியாங்கில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் உட்கொண்ட கருத்தடை மருந்துகளால், எதிர்பாராதவிதமாக உதிரப்போக்கு ஏற்பட்டதாக, பெண்கள் கூறுவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று குழந்தைகள் அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்த பெரும்பாலான பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்றும், ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உய்குர் இஸ்லாமியர்களை நன்னடத்தை முகாம்களில் தங்கவைத்திருப்பதாக சீனா மீது ஏற்கெனவே கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. இந்த முகாம்களில் உய்குர் இஸ்லாமியர்கள் மற்றும் பிற சிறுபான்மையின மக்கள் 10 லட்சம் பேர் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதை சீனாவும் பல்வேறு காரனங்களை கூறி ஒப்புக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News