எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்வர் இ.பி.ஸ் கண்டனம்.!
எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்வர் இ.பி.ஸ் கண்டனம்.!
By : Kathir Webdesk
புதுச்சேரி வில்லியனூரில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் சிலை உள்ளது. நேற்று அடையாளம் மர்மநபர்கள்அந்த சிலை மீது காவி துண்டு அணிவித்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டாக்கியது.
இதை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு அணிவித்ததற்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பை தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு காவல் துறையினரை குவித்தனர்.
மேலும், அதிகாரிகள் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு அதிமுகவினர் எம்ஜிஆர் சிலை மீது இருந்த காவி துண்டை அப்புறப்படுத்தி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிலையில் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்ததற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில்ல்: புதுச்சேரியில் உள்ள எம்ஜிஆர் அவர்களின் சிலைக்கு காவி துண்டு அணிவித்து களங்கப்படுத்தியது மிக மனவேதனை அளிக்கிறது.
எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு அணிவித்து காட்டுமிராண்டித்தனம் மற்றும் பெரும் கண்டிக்கத்தக்கது. ஒருமைப்பாட்டை சீர்குலைத்துவிட்டு, இதனை கொண்டு ஓட்டு அரசியல் பிழைப்பிற்கு சில கும்பல் திட்டமிட்டு வருகின்றனர். சமூகத்திற்கு தீவிரமாக உழைத்த தலைவர்களின் சிலைகள் அவமதித்து வருவது வருத்தத்தை அளிக்கிறது. இதை செய்தவர்கள் மீது புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசுவாமி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.