பெற்றோரை கொன்ற தாலிபான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற சிறுமி - குவியும் பாராட்டு.!
பெற்றோரை கொன்ற தாலிபான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற சிறுமி - குவியும் பாராட்டு.!
By : Kathir Webdesk
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் அரசுக்கு ஆதரவாக நடக்கும் மக்களை தாலிபான் தீவிரவாதிகள் கொன்று வருகின்றனர்.
தற்போது ஆப்கானிஸ்தான் தியோரா மாவட்டத்தில் உள்ள கமர் குல் என்பவர் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளார். கடந்த 16 ஆம் தேதி இரவு இவருடைய வீட்டிற்குள் நுழைந்த தலிபன் தீவிரவாதிகள் சிறுமியின் கண் எதிரே அவருடைய பெற்றோர்களை கொலை செய்துள்ளனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி பக்கத்தில் இருந்த AK-47 துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார். அதில் இரண்டு தீவிரவாதிகள் பலியாகினர். பின்பு சிறுமியின் தம்பி அந்த துப்பாக்கியை வாங்கி சுட்டதால் மேலும் சில தீவிரவாதிகள் பலியாகினர். பின்னர் மற்ற தீவிரவாதிகள் தப்பியுள்ளனார்.
இதன் பின் சிறுமியின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதனிடையே சிறுமியையும் அவரின் தம்பியையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.