Kathir News
Begin typing your search above and press return to search.

தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சியை தடுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் - விவரங்களை அடுக்கும் மிஷன் காளி இயக்கம்.!

தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சியை தடுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் - விவரங்களை அடுக்கும் மிஷன் காளி இயக்கம்.!

தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சியை தடுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் - விவரங்களை அடுக்கும் மிஷன் காளி இயக்கம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 July 2020 8:19 AM GMT

பள்ளர், தேவேந்திர குலத்தார் உட்பட பல உட்பிரிவுகளைக் கொண்ட ஜாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பட்டத்தைக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்!

இது ஒரு மிகச்சிறந்த முடிவாகும். காரணம், பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் குணம் மற்றும் தொழிலின் அடிப்படையில் இருந்தது வர்ணம்.

ஆனால் வர்ணத்தை மீறி தர்மத்தில் தூண்டுகோல் இல்லாமல் உருவான ஒரு விஷயம் ஜாதி. காலப்போக்கில் அதில் ஏற்றத்தாழ்வுகளும் உருவாகிவிட்டது.

சாதி ஏற்றத்தாழ்வுகளை நிஜமான இந்துக்கள் என்றுமே எற்பது கிடையாது. அதனால் தாழ்த்தப்பட்ட மக்களையும் பிறகு இந்துக்களுக்கு சமமாக முன்னேற்ற வேண்டும் என்பதுதான் உண்மையான இந்துத்துவ சிந்தனையாக இருக்க முடியும். ஆனால் இந்த முயற்சிக்கு தற்போது பல ஜாதிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதை விட ஆச்சரியமான விஷயம்... இந்தப் பிரச்சினைக்கு பின்புலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளும் செயல்பட்டு வருகின்றனர். அந்த கிறிஸ்தவ மிஷினரிகள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிரான வன்முறையை தூண்டும் விதமாக பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

வெள்ளாஞ் செட்டியார் என ஒரு சாதி, வெள்ளாளன் முதலியார் என ஒரு சாதி. இப்போ ஆபாசமா பேசி மாட்டிச்சே அந்தாள் வெள்ளால முதலி தான்.

பறையரிலே வெள்ளாள பறையர் என ஒரு சாதி உண்டு. இப்படி வெள்ளாளர் பட்டம் போட்டுக்கொண்டு இருக்கும் சாதிகள் தமிழ்நாட்டிலே மட்டும் நூற்றுக்கும் மேலே உண்டு. வலங்கை இடங்கை சண்டையிலே வலங்கையானா வெள்ளாளர் கூட நின்ன அனைத்து சாதிக்கும் வெள்ளாளன் பட்டம் கொடுக்கப்பட்டது.

தற்போது தேவேந்திரகுல சமூகத்தினர் வேளாளர் என்ற பட்டம் போட்டுக் கொள்ளக்கூடாது என்று குதிக்கும் ஜாதி சங்கங்கள், பொன்னர் சங்கர் கதை எழுதறேன்னு நம்ம குலசாமியை கேவலமா எழுதிய போதும், அதை படம் எடுத்தபோதும் ஏன் எதிர்க்கவில்லை? அட குலவிளக்கம்மன் கோவிலே ஈவேரா அண்ணாத்துரை தெரசா படம் இருக்கு! அதைக் கூட யாரும் எதிர்க்கவில்லை.

நம்மோட சனாதன தர்மத்தை ஒழிக்கனும் என பேசின கட்சி போன தேர்தலிலே வீட்டுக்கு ஆறாயிரம் என்றவுடனே வாயை தொங்கபோட்டுக்கு போயி ஓட்டுபோட்டுவிட்டோம் என்பதுதான் உண்மை!

இன்னைக்கு பார்ப்பனியம் வெள்ளாளர் பட்டத்தை திருடி அடுத்தவர்களுக்கு தருகிறது என்று கூறுகின்றனர் இந்த திருடர்கள். அதுவும் இந்த தனியரசு!? சாதிப்பற்று கூடாது என ஊட்டி ஊட்டி வளர்க்கிறோம் என பேசிவிட்டு இன்னைக்கு சாதிவெறி பேசுது.

இந்த ஈஸ்வரன் , கவுண்டனுக தான் என்ன அடிச்சானுக ஆனா அருந்ததியர் தான் உதவினானுக என மாநாட்டிலே பேசிய ஆள் இன்றைக்கு சும்மா கிடந்து துள்ளுது. இதெல்லாம் கூட பரவாயில்லை. இந்துக்களை ஜாதி சண்டை போட வைத்து விட்டு பின்னால் இந்த மிஷனரி கூட்டங்கள் அடிக்கும் லூட்டியை தான் தாங்க முடியவில்லை.

இந்து மதத்தில் தான் ஜாதி உண்டு. கிறிஸ்தவ மதத்தில் ஜாதி இல்லை.அதனால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் இந்துக்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டும் என்று பல காலமாக விஷம பிரச்சாரம் செய்த மிஷனரிகள், இந்தப் பிரச்சினையில் எப்படி மூக்கை நுழைக்கிறார்கள் தெரியுமா?

கிறிஸ்துவ வெள்ளாள சங்கம் என்ற பெயரில் கிறிஸ்துவ ஜாதி சங்கம் தேவேந்திர குல வேளாளர் பட்டம் கொடுப்பதை எதிர்த்து குரல் கொடுக்கிறது. இதுதான் மிஷினரி மதம் சாதியை ஒழித்த லட்சணம். அதாவது இந்து சமுதாயமான தேவேந்திர குலத்தார் சமுதாயம் முன்னேற விடாமல் ஒருபுறம் இந்த மிஷனரி கூட்டமே தடுக்கிறது.

ஆனால் நாளைக்கு என்ன சொல்வார்கள் தெரியுமா? உன்னை தாழ்த்தப்பட்டவன் ஆக மாற்றியது இந்து மதம் தான்.நீ கிறிஸ்தவன் அவனால்தான் உன்னால் சமுதாயத்தில் முன்னேற முடியும் என்று பச்சையாக பொய் பேசி மதம் மாற்றுவான் மிஷனரி.

இந்து தர்மத்தில் மட்டுமே அனைத்து மக்களையும் சமமாக பாவிக்க முடியும். இந்துத்துவச் சிந்தனையாளர்களால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களையும் உயர்த்த முடியும் என்பதற்கு தற்போது தேவேந்திரகுலதார் விவகாரம் சிறந்த உதாரணம்!

Image Credits : The Wire


Next Story
கதிர் தொகுப்பு
Trending News