ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் - தொடரும் பயங்கரவாதம்.!
ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் - தொடரும் பயங்கரவாதம்.!
![ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் - தொடரும் பயங்கரவாதம்.! ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் - தொடரும் பயங்கரவாதம்.!](https://kathir.news/static/c1e/client/83509/migrated/f45e3866bd0b38a888e07d1ff526015a.jpg)
ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிடித்தது. இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து நேற்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இதனால் அந்தப் பகுதிகளில் தீவிரவாதிகளால் பயங்கரவாத சம்பவம் நடைபெறலாம் என்பதால் தீவிர பாதுகாப்பு அமைக்கப்பட்டது. தற்போது குல்காம் மாவட்ட பாஜக துணைச்செயலாளர் சஜாத் அகமத் மீது இன்று தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அவரின் வீட்டின் முன்பு இருந்த சமயத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன் பின்பு படுகாயமடைந்த சஜாத் அகமத்தை அப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக பாஜக பிரமுகர்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நாலாவது தாக்குதல் ஆகும்.