Kathir News
Begin typing your search above and press return to search.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வங்கிக் கணக்கைத் தோண்டத் தோண்ட வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்.!

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வங்கிக் கணக்கைத் தோண்டத் தோண்ட வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்.!

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வங்கிக் கணக்கைத் தோண்டத் தோண்ட வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 5:57 AM GMT

பிரபல நடிகர் சுஷாந்த் சிங்க் ராஜ்புட் மரணத்தில் நாளுக்கு நாள் கதைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அதிர்ச்சியூட்டும் செய்தியாக, அலுவலகப் பையன் அளித்த அறிக்கையில் ரியா சக்ரபோர்ட்டி அந்நடிகரின் மேல் "சூனியம் " செய்ததாகக் கூறியுள்ளார். ரியா சுஷாந்த்க்கு மருந்துகள் வழங்குவாரேன்றும், அவரது மகிழ்ச்சி வாழ்க்கையை மனச்சோர்வுக்கு உட்படுத்தியதாகவும், அலுவலகப் பையன் குற்றம் சாட்டியுள்ளான்.

சுஷாந்த் சிங்க் ராஜ்புட் வங்கி கணக்குப்படி மூன்று முறை இணையம் மூலம் பூஜை பொருள் பெறுவதற்காகப் பணம் எடுக்கப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிக்கையின் படி ஜூலை 14 அன்று 45,000 டாலர் எடுக்கப்பட்டுள்ளது, ஆகஸ்ட் 2 கடந்த ஆண்டு 86,000 டாலர்கள் பூஜை சாமான்கள் வாங்க எடுக்கப்பட்டுள்ளன. 2019, ஆகஸ்ட் 8 அன்று, 11,000 டாலர்கள் சண்டங்குகள் செய்யக்கூடிய பூசாரிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இருப்பினும் அத்தகைய பூஜைகள் எதுவும் அரங்கேறவில்லை. சுஷாந்த் குடும்பத்தினர் அந்த பணங்கள் சுஷாந்த் மேல் சூனியம் செய்யப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். சுஷாந்தின் சகோதரி மித்து பாட்னா காவல்துறையினருக்கு விடுத்த அறிக்கையில், இது குறித்து தனது வீடு பணியாளர் ஒருவரிடம் இதைத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

"ரியா சுஷாந்த்துக்கு சில மருந்துகள் கொடுத்துவந்தார். அவர் சுஷாந்த் வாழ்க்கைக்கு வருவதற்கு முன்பு அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது, அவர் வந்த பின்னர் சுஷாந்த் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். பொதுவாக சுஷாந்த் மன உறுதி கொண்டவர், அவர் தற்கொலை செய்திருக்க முடியாது," என்று அலுவலகப் பையன் குற்றம் சாட்டியுள்ளான். மேலும் அவன், சுஷாந்தின் வாழ்க்கையில் ரியா வந்தபின்பு தனக்குச் சம்பளம் தாமதமாகக் கொடுத்தார் என்றும் தன்னை அதிக நேரம் பணிசெய்ய ரியா வற்புறுத்தியதாகவும்," அதனை மறுத்த போது கடும் சண்டையிடுவார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகரின் மெய்க்காப்பாளர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ரியா சக்ரபோர்ட்டிககு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்று அவர் நிரூபித்தார். ரியா சுஷாந்த் வாழ்க்கையில் வருவதுக்கு முன்பு சுஷாந்த் வாழ்க்கை மாறுபட்டிருந்தது அவர் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். ரியா மற்றும் அவர் குடும்பத்தினர் சுஷாந்த்தை ஒரு பணப்பெட்டியாகவே கண்டனர். சுஷாந்த் தந்தை ரியாவுக்கு எதிராகக் கொடுத்த அறிக்கை அனைத்தும் சரி மற்றும் சுஷாந்த்துக்கு நீதி கட்டாயம் கிடைக்க வேண்டுமென்று மெய்க்காப்பாளன் குற்றம் சாட்டினார்.

சுஷாந்த் பணத்தைச் செலவிடுவது விடுத்து ரியா அவருக்குப் போதைப் பொருள் கொடுத்ததாகவும் மெய்க்காப்பாளர் தெரிவித்துள்ளார். ரியா சுஷாந்தின் வாழ்க்கைக்கு வந்த பின்பு சுஷாந்தின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது என்று அவர் உறுதிசெய்தார். சுஷாந்த் அதிக நேரம் உறங்குவார் மேலும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருப்பார் என்று அவர் தெரிவித்தார். சுஷாந்த் கணக்காளர் மற்றும் ஊழியர்களை அவர் ரியா மாற்றியதாகத் தெரிவித்தார். மேலும் அவரை நேரடியாக யாரையும் சந்திக்க அனுமதிக்க மாட்டார் என்றும் அவர் கூறினார். ரியாக்கு முன்பு சுஷாந்தின் மூத்த சகோதரி பிரியங்கா சிங்க் இவரை அடிக்கடி சந்தித்து அவருடன் தங்குவர் என்றும் கூறினார். மேலும் கடந்த ஒரு வருடங்களாக ரியாவின் குடும்பத்தினர் சுஷாந்த்தை விருந்தளிப்பதற்கும் செலவழிப்பதற்குமே பயன்படுத்தி வந்ததாக மெய்க்காப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.


source: https://www.opindia.com/2020/08/sushant-singh-rajput-bank-account-puja-purchase-black-magic-rhea-medicine-office-boy/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News