எனக்கு ஏதாவது கதை யோசித்து வையுங்கள் என ஃபோன் மூலம் இளம் இயக்குனர் தேசிங் ராஜாவிடம் உரையாடல்.!
எனக்கு ஏதாவது கதை யோசித்து வையுங்கள் என ஃபோன் மூலம் இளம் இயக்குனர் தேசிங் ராஜாவிடம் உரையாடல்.!
By : Kathir Webdesk
தேசிங் ராஜா கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கியனார். இந்தப் படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா இவர்களின் நடிப்பில் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி சாதனையை படைத்தது.
இந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை நடிகர் ரஜினி பார்த்துவிட்டு தேசிங்கு ராஜா அவர்களுக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.இதனை தேசிங்ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதனை அடுத்து நடிகர் ரஜினி அவரிடம் மிக அருமையான படம் பிரமாதம் என்றும் வாழ்த்தினார். இத்தனை நாள் இந்த படத்தை பார்க்காமல் இருந்ததற்கு மன்னிக்கவும் என்றும் இந்த படத்தில் வரும் காட்சிகள் இது பற்றி எனக்கு தெரியாது எனவும் இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன் என்றும் கூறினார்.
நடிகர் ரஜினி ராஜாவிடம் எனக்காக ஒரு கதை யோசியுங்கள் என்று கூறினார். இவர்கள் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.