Kathir News
Begin typing your search above and press return to search.

கேரள கன்னியாஸ்த்திரி பாலியல் வன்கொடுமை விவகாரம் - பிஷப்பிற்கு விதிவிலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.!

கேரள கன்னியாஸ்த்திரி பாலியல் வன்கொடுமை விவகாரம் - பிஷப்பிற்கு விதிவிலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.!

கேரள கன்னியாஸ்த்திரி பாலியல் வன்கொடுமை விவகாரம் - பிஷப்பிற்கு விதிவிலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 11:53 AM GMT

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள குருவிலாங்காடில் என்ற இடத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் ரோமன் கத்தோலிக்க பிஷப் பிராங்கே என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே குருவிலாங்காடில் கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி ரோமன் கத்தோலிக் ஷப் பிராங்கோ என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டயம் மாவட்ட போலீசில் கன்னியாஸ்திரி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட பெண் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

அதில், முதன் முதலாக 2014-ம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடில் உள்ள விருந்தினர் மாளிகையில் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பி ஷப் பிராங்கோ, தொடர்ந்து இதே போல மிரட்டி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்தார். தேவாலய நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் போலீசில் புகார் கொடுக்கிறேன் என கூறி இருந்தார்.

இதுபற்றி கோட்டயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பி ஷப் பிராங்கோ முலக்கல்லை கைது செய்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பி ஷப் பிராங்கோ தாக்கல் செய்த மனுக்கள் மாவட்ட மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பிஷப் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஏற்கத்தகுந்தது அல்ல என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News