Kathir News
Begin typing your search above and press return to search.

எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு காரணம் சூர்யா தான் என்று பதிவு செய்த மீரா மிதுன்.!

எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு காரணம் சூர்யா தான் என்று பதிவு செய்த மீரா மிதுன்.!

எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு காரணம் சூர்யா தான் என்று பதிவு செய்த மீரா மிதுன்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2020 6:20 AM GMT

ஏற்கனவே விஜய்,ரஜினி,த்ரிஷா குறித்து இவர் பதிவிட்டு இருந்தது சமூக வலைத்தளங்கள் பரபரப்பாக பேசப்பட்டது. அவரை பற்றி பலவாறு அவதூராக கமெண்ட் செய்தாலும் இவர். அடங்குவதாக தெரியவில்லை. அதனை அடுத்து தற்பொழுது சூர்யாவை பற்றியும் பதிவிட்டிருக்கிறார்.

சூர்யாவைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு மீரா மிதுன் சூர்யாவிற்கு நடிக்க தெரியாது என்றும் அவருக்கு acting-க்கு கூட ஸ்பெல்லிங் தெரியாது எனவும் கூறியிருந்தார்.இதை இவர் வீடியோ பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்தார். இந்த பதிவை பார்த்த சூர்யா ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர். பலரும் பலவாறு திட்டி கமெண்ட் செய்தனர்.

இவர் கூறியிருப்பது: விஜய், சூர்யா ரசிகர்கள் என்னை போனில் கண்டபடி மிரட்டுவதாகவும்,எனக்கு ஏதாவது நேர்ந்தால் சூர்யா தான் காரணம் என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் மீரா மிதுன். இவர் மேலும் இந்தி பட உலகை போல தமிழ் பட சினிமாவிலும் வாரிசு அரசியல் இருக்கிறது என டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தனுஷ் பற்றியும் பேசி இருந்தார்.

விஜய்,சூர்யா ரசிகர்கள் என்னை போனில் அவதூராக பேசுவதும், மோசமான செய்திகள்,மொபைல் அழைப்புகள்,கொலை மிரட்டல், கற்பழிப்பு ஆகிய அச்சுறுத்தல் வருவதாகவும் கூறியிருக்கிறார். இந்த பதிவு உங்கள் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் இது போல் நடந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா எனவும் 80 மொபைல் நம்பர்கள் மூலம் என மிரட்டுவதாகவும், எனக்கு பயமாக இருக்கிறது என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு ரசிகர்கள் நீங்கள் வாயை மூடி இருந்தாள் யாரும் உங்களை அவதூறாகப் பேச மாட்டார்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News