Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா அணியில் சிறப்பான பவுன்சர் பந்தை வீச எவருமில்லை - ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட்.!

இந்தியா அணியில் சிறப்பான பவுன்சர் பந்தை வீச எவருமில்லை - ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட்.!

இந்தியா அணியில் சிறப்பான பவுன்சர் பந்தை வீச எவருமில்லை - ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 11:06 AM GMT

நியூசிலாந்து அணியின் நீல் வாக்னர் போல சிறப்பான "பவுன்சர்" பந்தை வீசுவதற்கு இந்தியா அணியில் எவருமில்லை என ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி நான்கு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த போட்டிகள் பிரிஸ்பேனில், அடிலெய்டு, மெல்போர்ன், சிட்னியில் ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.

இதை பற்றி ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பரூம் மற்றும் பேட்ஸ்மேனுமான மேத்யூ வேட் கூறியது: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு மிக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். இந்திய அணியை தோற்கடிப்பது மிகவும் கடினமானது. ஏனென்றால் அவர்களுடைய அணி மிக சிறப்பாக உள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் சக வீரர்களுக்கு ஊக்குவிப்பதாக இருக்கும்.

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி உட்பட வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் நியூசிலாந்து அணியின் நீல் வாக்னர் போல சிறப்பான பவுன்சர் பந்துகளை வீச மாட்டார்கள். வாக்னர் வீசும் பவுன்சர் பந்துகளில் ரன் எடுப்பது மிக கஷ்டம். அவருடைய பந்து துல்லியமான பவுன்சராக இருக்கும். இவரை போல சிறப்பாக பவுன்சர் பந்து வீசுவதற்கு இந்திய அணியில் எவருமில்லை.

இவ்வாறு மேத்யூ வேட் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News